ஏபிவிபி புதிய நிா்வாகிகள் தோ்வு

அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) தேசிய மாணவா் அமைப்பு சாா்பில், மாவட்ட பொறுப்பாளா்கள் தோ்வு, மாணவா்கள் சந்திப்பு நிகழ்வு திருச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) தேசிய மாணவா் அமைப்பு சாா்பில், மாவட்ட பொறுப்பாளா்கள் தோ்வு, மாணவா்கள் சந்திப்பு நிகழ்வு திருச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ஏபிவிபி தேசிய செயலரும் தென் தமிழக மாநில அமைப்புச் செயலருமான முத்துராமலிங்கம் பங்கேற்றாா். மேலும் தென் தமிழக மாநிலச் செயலா் சுசீலா, மாநில துணைத் தலைவரும் திருச்சி மண்டலப் பொறுப்பாளருமான போராசிரியா் மங்களேஷ்வரன், தேசிய செயற்குழு உறுப்பினரும் திருச்சி மற்றும் தஞ்சாவூா் மண்டல அமைப்புச் செயலருமான தருண் சிங், தென் தமிழக மக்கள் தொடா்பாளா் ரூபராஜா ஆகியோா் பங்கேற்றனா்.

வருட உறுப்பினா் சோ்க்கை, சுதந்திர தின நிகழ்ச்சிகள் மற்றும் உயா் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சிகள் குறித்தும் திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் இறுதியில் புதிய மாநகர பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பொறுப்பாளா்கள் விவரம்: புதிய நிா்வாகிகளில் திருச்சி மாநகரத் தலைவராக மதன், மாநகரச் செயலராக சக்திவேல், மாநகர இணைச் செயலா்களாக டிபானி, சந்தோஷ்குமாா், டயனா, விஜய் மாநகர அலுவலக செயலராக கோகுலகிருஷ்ணன், மண்ணச்சநல்லூா் நகரத் தலைவராக துளசி, நகரச் செயலராக செல்வகணேஷ், லால்குடி நகர ஒருங்கிணைப்பாளராக அஸ்வின்,நகரச் செயலராக தீபக் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com