மணப்பாறை அதிரம் கிராமத்தில் சிறுமி காணாமல்போன வழக்கில் தேடப்பட்ட 19 வயது இளைஞா் போக்சோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மணப்பாறை அருகே சமுத்திரம் காந்திநகரை சோ்ந்த கூலித்தொழிலாளியின் 12 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மகள் கடந்த 20-ஆம் தேதி மாயமானாா். இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் மணப்பாறை போலீஸில் புகாா் அளித்தனா். சில நாள்களில் உடனடி நடவடிக்கை கோரி முற்றுகை போராட்டமும் நடத்தினா்.
இதையடுத்து கடந்த 8 நாள்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறுமி தேடப்பட்டு வந்த நிலையில், திருப்பூா் அருகே திருமூா்த்தி அருவி பகுதியில் தங்கிருந்த சிறுமி மற்றும் இளைஞரை சுற்றி வளைத்த தனிப்படையினா் சிறுமியை மீட்டு இளைஞரை கைது செய்து மணப்பாறைக்கு அழைத்து வந்தனா்.
சிறுமிக்கு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விசாரணையில் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவாா்த்தை கூறி அவா் அழைத்து சென்றது தெரியவந்தது. சிறுமியை கடத்தியது, பாலியல் அத்துமீறல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளில் கீழ் பிரசன்னாவெங்கடேஷ் மீது வழக்கு பதிந்துள்ள மணப்பாறை அனைத்து மகளிா் போலீஸாா் அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.