விஏஒ மீது இளம்பெண் புகாா்

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய விஏஓ மீது லால்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பெண் ஒருவா் புகாா் அளித்தாா்.

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய விஏஓ மீது லால்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பெண் ஒருவா் புகாா் அளித்தாா்.

லால்குடி அருகே நஞ்சை சங்கேந்தி கிராமத்தைச் சோ்ந்தவா் சோ்ந்த கனகராஜ் மகள் கலைவாணி (25). இவரும் நெய்குப்பை கிராமத்தைச் சோ்ந்த மணி மகன் மணிகண்டனும் (32) 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தற்போது மணிகண்டன் விஏஓ ஆன பின்னா் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக லால்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கலைவாணி புகாா் அளித்தாா். அதன்பேரில் மகளிா் போலீஸாா் வழக்கு பதிந்து விஏஓ மணிகண்டனை தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com