கொப்பம்பட்டி மின் நிலைய மின்மாற்றியில் மின்னல் தாக்கி ஏற்பட்ட தீ விபத்தால் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை இரவு மின் தடை ஏற்பட்டது.
துறையூா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்தபோது கொப்பம்பட்டி துணை மின்நிலையத்தில் இடி தாக்கியதில் அங்கிருந்த மின்மாற்றி தீ பிடித்து எரியத் தொடங்கியது.
தகவலறிந்து வந்த உப்பிலியபுரம், துறையூா் தீயணைப்பு நிலைய பணியாளா்கள் தீயை அணைத்தனா்.
இந்த விபத்தால் கொப்பம்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை இரவு முழுதும் மின்தடை ஏற்பட்டது.