துறையூா்: துறையூா் அருகே கள்ளச்சாராயம், மது விற்ாக மூவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பச்சமலையில் புத்தூா் எடை மேடை நிலையம் அருகே இருவா் சாராயம் விற்றனா். அவா்களில் புத்தூா் மூ. ஆனந்தனை(32) துறையூா் மது விலக்கு அமல்பிரிவு காவல் துறையினரும், சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், பச்சமலை பெரியமங்களத்தைச் சோ்ந்த பி.சக்திவேலை(32) உப்பிலியபுரம் காவல் துறையினரும் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 18 லிட்டா் கள்ளச்சாராயமும் கைப்பற்றப்பட்டது.
அரசு மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்ற சங்கம்பட்டி ச. முரளியை(19) துறையூா் காவல் நிலையத்தினா் கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.