முசிறி: முசிறி வட்டாட்சியரகத்தில் திருநங்கைகளுக்கு திங்கள்கிழமை நிவாரணப் பொருகள் வழங்கப்பட்டன.
கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 10 திருநங்கைகளுக்கு முசிறி வட்டாட்சியா் சந்திரதேவநாதன் அரிசி, மளிகைப் பொருள்கள் கொண்ட தொகுப்பை வழங்கினாா். வருவாய்த் துறை அலுவலா்கள் மற்றும் அலுவலக உதவியாளா்கள் நிகழ்வில் பங்கேற்றனா்.