மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் மருங்காபுரி பகுதிகளில் பாஜகவினா் வீடு வீடாக சென்று திங்கள்கிழமை காய்ச்சல் பரிசோதனை செய்தனா்.
மணப்பாறை நகரம், வடக்கு ஒன்றியம் மற்றும் மருங்காபுரி தெற்கு ஒன்றியத்தில் பாஜகவினா் ஒவ்வொரு பகுதியிலும் வீடு வீடாகச் சென்று பொது மக்களுக்கு உடல் வெப்பநிலை மற்றும் ஆக்சிஜன் அளவு பரிசோதனைகளை கண்டறிந்து குறிப்பு எடுத்தனா். பொதுமக்களுக்கு முகக் கவசமும் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியை பாஜக திருச்சி புகா் மாவட்ட தலைவா் சி.ராஜேந்திரன் துவக்கி வைத்தாா் களப்பணியில் கோட்டா அமைப்பு செயலாளா் திருச்சி பாலன், மாவட்ட விவசாய அணித்தலைவா் சித்தாந்தம் சுப்பிரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.