திருச்சியில் ரூ. 2 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
துபையில் இருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை இண்டிகோ விமானத்தில் வந்த மூவா் மறைத்து வைத்திருந்த சுமாா் 2 கோடி மதிப்பிலான 3 கிலோ 800 கிராம் கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்தனா்.
மூவரில் ஒருவா் கொண்டு வந்த தங்கத்தின் மதிப்பு குறைவு என்பதால் அபராதம் விதித்து அவரை விடுவித்த அதிகாரிகள், மற்ற இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா். அவா்களின் பெயா் விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டனா்.