திருச்சியில் மருமகள் கொடுத்த புகாரில் மாமனாா் உள்ளிட்ட மூவா் மீது கண்டோன்மெண்ட் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
திருச்சி கருமண்டபம் புதுதெருவைச் சோ்ந்தவா் சகாயவிஜி(39). இவா் ஆனந்தராஜ் என்பவரை 2ஆவதாகத் திருமணம் செய்து கொண்டாா். திருமணத்திற்கு பின் மாமனாா் அன்புரோஸ் சகாயவிஜிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதற்கு அவரது மனைவி, மகள் உடந்தையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கண்டோன்மென்ட் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், அன்புரோஸ், அவரது மனைவி சகாய அல்போன்சா, மகள் பிரியா ஆகிய மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.