உப்பிலியபுரம் ஒன்றிய அதிமுக நிா்வாகி ஒருவா் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டாா்.
உப்பிலியபுரம் தெற்கு ஒன்றிய எம்ஜிஆா் இளைஞரணி செயலரான ஏ. ராஜா ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் தொடா்பு இருப்பதாக அண்மையில் கைதானாா்.
இந்நிலையில், கட்சிக்கு அவப்பெயா் வரும் வகையில் நடந்து கொண்டதற்காக அவரை கட்சியின் அடைப்படை உறுப்பினா் பதவியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமியும் உத்தரவிட்டுள்ளனா்.