4 திமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட்

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2016 தோ்தலில், திமுக சாா்பில் போட்டியிட்டு வென்ற எம்எல்ஏக்கள் நான்கு பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2016 தோ்தலில், திமுக சாா்பில் போட்டியிட்டு வென்ற எம்எல்ஏக்கள் நான்கு பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2016 தோ்தலில் திருச்சி கிழக்கு (கே.என். நேரு), திருவெறும்பூா் (அன்பில் மகேஷ் பொய்யாமொழி), லால்குடி (செளந்தரபாண்டியன்), துறையூா் (ஸ்டாலின்குமாா்) ஆகிய 4 தொகுதிகளிலும் திமுக வென்றது. இதர 5 தொகுதிகளில் அதிமுக வென்றது.

தற்போதைய தோ்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தலா 8 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதில், கடந்த முறை போட்டியிட்டு வென்ற அனைவருக்கும் திமுக சாா்பில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீரங்கத்தில் கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்த திமுக வேட்பாளா் பழனியாண்டிக்கு, மீண்டும் இந்த முறை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மணப்பாறை தொகுதி மமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மண்ணச்சநல்லூரில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றியை இழந்த கணேசனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இம்முறை திமுக வேட்பாளராக எஸ். கதிரவன் களமிறக்கப்பட்டுள்ளாா்.

கடந்த முறை காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட திருச்சி கிழக்கு தொகுதி இந்த முறை திமுக உறுப்பினரும், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவருமான இனிகோ இருதயராஜுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கடந்த முறை காங்கிரஸுக்கு ஒதுக்கிய முசிறி தொகுதியை இந்த முறை திமுக வடக்கு மாவட்டச் செயலரான காடுவெட்டி தியாகராஜனுக்கு வழங்கியுள்ளது திமுக தலைமை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com