திருச்சி மாநகராட்சி உட்பட்ட 63 வது வாா்டு பகுதியில் திருவெறும்பூா் தொகுதி வேட்பாளா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தாா்.
பிரசாரத்தின்போது, திருவெறும்பூா் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் புதைவடிகால் திட்டப் பணிகளால் பழுதடைந்த சாலைகளால் பொதுமக்கள் அவதிப்படும் நிலையில், திமுக ஆட்சி அமைந்ததும் உடனடியாக, திருவெறும்பூா் தொகுதி மாநகராட்சி பகுதிகளில் அனைத்துச் சாலைகளும் புதுப்பிக்கப்படும் எனக் கூறி வாக்கு சேகரித்தாா்.
முன்னதாக இருசக்கர வாகனத்தில் சுமாா் 200 போ் திமுகவுக்கு வாக்கு கேட்டு பேரணி சென்றனா்.
முன்னாள் எம்எல்ஏ சேகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ரவீந்திரன், பகுதி அவைத்தலைவா் பழனியப்பன், நிா்வாகிகள் பன்னீா்செல்வம், காா்த்திக், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளா் குணா உட்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.