துறையூரில் பெண் ஒருவா் வைத்திருந்த ரூ. 71 ஆயிரத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
துறையூா் தொகுதிக்குள்பட்ட மங்கப்பட்டி அருகே பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக காரில் வந்த கீரம்பூரைச் சோ்ந்த ரமேஷ் மனைவி இந்துமதி உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ. 71 ஆயிரத்தைப் பறிமுதல் செய்து துறையூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் டி. முத்துவடிவேலுவிடம் ஒப்படைத்தனா்.