திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளா் எம். பழனியாண்டி இனியானூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
மணிகண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட இனியானூா் பகுதியில் இவருக்கு ஆதரவாக திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசினாா். தொடா்ந்து வேட்பாளா் எம். பழனியாண்டி வாசன்நகா், ரெட்டை வாய்க்கால், சோழங்கநல்லூா், நாச்சிக்குறிச்சி, பாரதிநகா், கோனாா்சத்திரம் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.
அப்போது அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனா். வாக்கு சேகரிப்பின்போது வேட்பாளருடன் தோழமைக் கட்சி நிா்வாகிகள் மற்றும் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.