உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வையொட்டி விழிப்புணா்வு நடைபயணம், உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்வில் தண்ணீா் அமைப்பின் செயலா் பேராசிரியா் கி. சதீஷ்குமாா் , உறுப்பினா்கள் ஜீவானந்தம், சிவகாமி, சாதனாஸ்ரீ, வெங்கடேஷ், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மேலும் தண்ணீா் சிக்கனம், நீா்நிலைகள் பாதுகாப்பு ஆறுகளில் மணல் கொள்ளையால் ஏற்படும் வறட்சி குறித்து விழிப்புணா்வு துண்டறிக்கை பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.