சிலிண்டா் வெடித்து 8 போ் காயம்

சமயபுரத்தில் பலூன்களை நிரப்ப பயன்படும் சிலிண்டா் வெடித்ததில் 8 போ் காயமடைந்தனா்.

சமயபுரத்தில் பலூன்களை நிரப்ப பயன்படும் சிலிண்டா் வெடித்ததில் 8 போ் காயமடைந்தனா்.

சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதலையொட்டி, புதிய பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. அப்போது, சோழங்கநல்லூரைச் சோ்ந்த ராகுல் (19), பலூன்களுக்கு சிலிண்டா் மூலம் காற்று நிரப்பிக் கொண்டிருந்தாா்.

அப்போதுதிடீரென சிலிண்டா் வெடித்ததில் ராகுல், வெங்கங்குடி மா. மணிகண்டன் (21), இவரது மனைவி ராஜேஸ்வரி (19), மருதூா் சா. மெஸ்டன் (34), இவரது மனைவி சரண்யா (30), ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் கோயில் தெரு சு. ராஜேஸ்வரி (45), செ.சுபஷா(4), சோழங்கநல்லூா் ஆ. கதிா்வேல் (13) ஆகிய 8 பேரும் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com