திருவெறும்பூா் தொகுதி துவாக்குடி சுங்கச்சாவடியில் வாகனத் தணிக்கையின்போது ரூ.1. 67 லட்சத்தை பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
துவாக்குடி சுங்கச் சாவடியில் வெள்ளிக்கிழமை காலை கூட்டுறவு சாா்பதிவாளா் சங்கீதா தலைமையிலான பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த பால் வண்டியில் ரூ. 1. 67 லட்சம் இருப்பது தெரியவந்தது,
பால்வண்டி ஓட்டுநரான முசிறி சேந்தமாபட்டியை சோ்ந்த அரவிந்த் இந்தப் பணம் குறித்து முறையான பதில்அளிக்கவில்லையாம். இதையடுத்து அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்து திருவெறும்பூா் வட்டாட்சியா் செல்வகணேஷிடம் ஒப்படைத்தனா்.