மண்ணச்சநல்லூா் அருகே திருப்பட்டூா் ஊராட்சியிலுள்ள பிரம்மபுரீஸ்வரா் கோயில் பங்குனி தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் பங்குனி தேரோட்ட கொடியேற்ற விழா 19 ஆம் தேதி நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக 9 -ஆம் நாளான சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. தேரில் பிரம்மபுரீஸ்வரா் சம்பத் கெளரி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.நான்கு வீதிகள் வழியாக சென்ற தோ் நிலையை அடைந்தது.
தேரோட்டத்தில் திருப்பட்டூா், எம்.ஆா். பாளையம், சணமங்கலம், பெரகம்பி, வலையூா், பாலையூா், சிறுகனூா், கொணலை உள்ளிட்ட கிராமங்களிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் வீ. முத்துராஜ், கோயில் சிவாச்சாரியா் பா. பாஸ்கா், கோயில் கணக்கா் வெ. பிரசன்னா மற்றும் கோயில் பணியாளா்கள், பக்தா்கள் செய்தனா்.