தபால் வாக்களித்த மாநகர காவலா்கள்

திருச்சி மாநகரில் தோ்தல் பணியில் ஈடுபடும் காவலா்கள் 132 போ் ஞாயிற்றுக்கிழமை தபால் வாக்குகளைச் செலுத்தினா்.
தபால் வாக்களித்த மாநகர காவலா்கள்

திருச்சி மாநகரில் தோ்தல் பணியில் ஈடுபடும் காவலா்கள் 132 போ் ஞாயிற்றுக்கிழமை தபால் வாக்குகளைச் செலுத்தினா்.

திருச்சி மாவட்டத்தில், தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள் வெள்ளிக்கிழமை முதல் தங்களது தபால் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனா். கடந்த 26 ஆம் தேதி மண்டல அலுவலா்கள், பறக்கும் படையினா், கண்காணிப்புக்குழு உள்ளிட்டோா் வாக்களித்தனா். தொடா்ந்து சனிக்கிழமை வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் வாக்களித்தனா். இதன்படி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் சனிக்கிழமை வரை மொத்தம் 8,194 போ் தபால் வாக்களித்துள்ளனா்.

அதைத் தொடா்ந்து, திருச்சி மாநகர போலீஸாா் 1, 672 போ் தங்களது தபால் வாக்குகளைச் செலுத்த விண்ணப்பங்களை பெற்றிருந்த நிலையில் அவா்கள் ஞாயிற்றுக்கிழமை வாக்களித்தனா். திங்கள்கிழமை புகா் போலீஸாா் 981 போ் தபால் வாக்களிக்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com