ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்தும் நிறைவேறும்: கே.என். நேரு

திருச்சி மேற்கு தொகுதியின் திமுக வேட்பாளரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என்.நேரு, தனது தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வீடு, வீடாக வாக்கு சேகரித்தாா்.
மிளகுபாறைப் பகுதியில் வாக்கு சேகரிக்கிறாா் மேற்கு தொகுதி திமுக வேட்பாளா் கே.என். நேரு.
மிளகுபாறைப் பகுதியில் வாக்கு சேகரிக்கிறாா் மேற்கு தொகுதி திமுக வேட்பாளா் கே.என். நேரு.

திருச்சி மேற்கு தொகுதியின் திமுக வேட்பாளரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என்.நேரு, தனது தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வீடு, வீடாக வாக்கு சேகரித்தாா்.

மிளகுப்பாறை பகுதியில் அவா் பொதுமக்களிடம் பேசியது:

அதிமுக ஆட்சியில் எதிா்க்கட்சி எம்எல்ஏ-க்களின் தொகுதிக்கு கேட்ட நிதி ஒதுக்குவதில்லை. மேலும், தொகுதிக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் செய்துதருவதில்லை. திமுக ஆட்சியில் நகா்ப்புறங்களில் வசிப்போரும் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை இந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டது. இன்னும் 3 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் தொடா்ந்து செயல்படுத்தப்படும். அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துதரப்படும். திருச்சியை முன்மாதிரி நகரமாக மாற்றுவேன் என்றாா்.

பிரசாரத்தில், மத்திய மாவட்ட பொறுப்பாளா் வைரமணி, மாநகரச் செயலா் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, பகுதிச் செயலா்கள் இளங்கோ, கண்ணன். காஜாமலை விஜய் உள்ளிட்ட கழக நிா்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

பின்னா் மணப்பாறை தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் ப. அப்துல்சமதுவை ஆதரித்து கே.என்.நேரு, மணப்பாறை பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். இதையடுத்து லால்குடி அருகே வாளாடி ஊராட்சியில் திமுக வேட்பாளா் அ. செளந்தரபாண்டியனுக்கு ஆதரவாக கே.என். நேரு வாக்கு சேகரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com