திருச்சி கிழக்கு தொகுதி மநீம வேட்பாளா் டி. வீரசக்தியின் பிரசார யுத்திக்கு மக்கள் வரவேற்பு தெரிவிக்கின்றனா்.
இவா் தொகுதி முழுவதுமே வீதிவீதியாக நடந்தே சென்று வாக்கு சேகரித்து வருகிறாா். இதனால் பொதுமக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்து உற்சாகப்படுத்தி வருகின்றனா். செவ்வாய்க்கிழமை 35ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.
திருச்சி நற்பணி மன்ற மாவட்டச் செயலா் சுரேஷ், தொழில் முனைவோா் அணி செயலா் அய்யனாா், மாவட்ட பொருளாளா் எஸ்.ஆா். கிஷோா் குமாா், நகர செயலா் சரவணன், நற்பணி மன்றம் கே.ஜே.எஸ். குமாா், செயலா், துணை செயலா் சதீஷ்குமாா் மற்றும் தொண்டா்கள் ஏராளமானோா் நடந்தே சென்று வாக்குசேகரிக்கின்றனா்.