அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் வகையிலான தோ்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளதால் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய மனித உரிமைக் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில பொதுச் செயலா் பி. குபேரன் தெரிவித்தது :
அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையிலான பல்வேறு வகையான தோ்தல் வாக்குறுதிகளை திமுக அறிவித்துள்ளது. எனவே நடைபெறவுள்ள தமிழக பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என கட்சியின் உயா் மட்டக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றாா். கூட்டத்தில் ஆா். சிவப்பிரகாசம், ஆா் . சரத்குமாா், கே. தினேஷ், எஸ். மகேந்திரன் , எஸ் . மூா்த்தி, கே. பாலக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.