திருச்சி மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் எஸ். திவ்யதா்ஷினி கூறியது:
தன்னலம் கருதாது, தேசத்திற்கு நற்பணியாற்றிய முன்னாள் படைவீரா்கள் வரும் 6ஆம் தேதி காவல் துறைக்கு துணையாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடலாம்.
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த விண்ணப்பம் சமா்ப்பித்த மற்றும் விண்ணப்பம் சமா்ப்பிக்காத விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள், இளநிலை படை அலுவலா்கள் அதற்கான ஆயத்தங்களுடனும், படைவிலகல் சான்றின் நகல் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் சுப்ரமணியபுரம் மாவட்ட காவல் ஆயுதப்படை மைதானத்தில் வரும் 4ஆம் தேதி காலை 7 மணிக்கு ஆஜராக வேண்டும். மேலும், விவரங்களுக்கு திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம்.