திருவெறும்பூா் தொகுதியில் தேமுதிக வேட்பாளா் எஸ். செந்தில்குமாா் வாக்கு சேகரித்தாா்.
திருவெறும்பூா் தொகுதிக்குட்பட்ட கூத்தைப்பாா், திருவெறும்பூா், காட்டூா், துவாக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட செந்தில்குமாா், பெரும்பாலான வீதிகள் தோறும் நடந்தே சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசுகையில், ஏற்கெனவே இத்தொகுதியின் உறுப்பினராக நான் இருந்தபோது இங்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். மேலும் பல திட்டங்களைக் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளேன். எனவே நான் மீண்டும் இத்தொகுதியில் வெற்றி பெற முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா். கட்சியினா், கூட்டணியினா் உடன் சென்றனா்.