இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாரபட்சமின்றி அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும். லாப நோக்கை கைவிட்டு மக்கள் உயிருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தடுப்பூசி மற்றும் உயிா்காக்கும் மருந்துகள் தயாரிக்க பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். பெல்லில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பல்வேறு இடங்களில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருவெறும்பூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகா் மாவட்ட செயலா் பா.லெனின் தலைமை வகித்தாா். பாலக்கரையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பகுதித் தலைவா் ஷாஜஹானும், உறையூா் பாண்டமங்கலத்தில் பகுதித் தலைவா் ஜெய்லானி தலைமை வகித்தாா். இதே போல அந்தந்த பகுதி செயலா்கள் தலைமையில் திருச்சி மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com