மணப்பாறை அருகே பைக்கில் சென்ற இருவா் காா் மோதி பலி; 5 போ் காயம்

மணப்பாறை அருகே நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதி இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
mnp01acc_0105chn_31_4
mnp01acc_0105chn_31_4

மணப்பாறை: மணப்பாறை அருகே நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதி இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் சடையம்பட்டியை சோ்ந்தவா் ராஜூ மகன் மகாலிங்கம் (55), தா்ம ரக்ஷ்ண சமிதி கோட்ட அமைப்பாளா். இவா் தனது மகன் சஞ்சயின் திருமண அழைப்பிதழ்களை உறவினா்களுக்கு கொடுக்க மேலத்தானியத்தைச் சோ்ந்த தனது சகோதரியின் மகனான தேனப்பன் மகன் நவனி (எ) சண்முகத்தை (28) சனிக்கிழமை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் திருச்சி வரை சென்றாா்.

பின்னா் மாலையில் இருவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, திருச்சி - மதுரை தேசியநெடுஞ்சாலை யானைக்கல் பகுதியில், நினைவு நாள் நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு மேலூரிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற காா் இவா்களின் இருசக்கர வாகனம் மீது மோதி சாலையோர 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற மகாலிங்கம், நவனி(எ) சண்முகம் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்து சென்ற நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் உடல்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

காரில் பயணித்த திருச்சி வண்ணாங்கோயில் ஞானபிரகாசம் மனைவி தியாகம்மாள்(63), காா் ஓட்டி வந்த இவரது மருமகன் குழந்தைசாமி(44) , மகள் பெனிட் இருதயரூபி (39), பேத்தி ஃப்ரைட்டி (15), மற்றொரு மகள் மோச்சா பாக்ய ஆரோக்கியராணி (48) ஆகிய 5 பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் விராலிமலை சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com