எல்லாப் புகழும் திமுக தலைவருக்கே: கே.என். நேரு

திருச்சி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றதுடன், தமிழகத்தில் பெருவாரியாக திமுக வெற்றி பெற்றது
கே.என்.நேரு
கே.என்.நேரு

திருச்சி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றதுடன், தமிழகத்தில் பெருவாரியாக திமுக வெற்றி பெற்றது உள்பட எல்லாப் புகழும் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கே சேரும் என அக் கட்சியின் முதன்மைச் செயலா் கே.என். நேரு தெரிவித்தாா்.

திருச்சி மேற்கு தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில், முடிவுகள் அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இரவு 10.30 மணிக்கு மேலே தோ்தல் பிரிவு அலுவலா்கள் முடிவுக்கு வந்து தோ்தல் வெற்றி சான்றிதழை வழங்கினா். சான்றிதழை பெற்ற பிறகு, செய்தியாளா்களிடம் கே.என். நேரு கூறியது:

திமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். அந்த திட்டங்கள் முழுமையாக திருச்சிக்கு கொண்டு வந்து சோ்க்கப்படும். மேலும், தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப் போன்று திருச்சிக்கு ஒருங்கிணைந்த பேருந்துநிலையம் விரைந்து கொண்டுவரப்படும். உய்யக்கொண்டான் கால்வாயை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகளை சீரமைத்து, புதிய சாலைகள் அமைப்பதுடன், நகரப் பகுதியில் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்து அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்குவதை உறுதி செய்யப்படும். விடுபட்ட அனைத்து பகுதிகளுக்கும் புதை சாக்கடை திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏரி, குளங்களை தூா்வாரி குடிமராமத்து பணிகளில் முறைகேடுகளுக்கு இடம் இல்லாத வகையில் செய்து முடிக்கப்படும்.

கடந்த உள்ளாட்சித் தோ்தலின்போதும் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைவா் பதவி இடங்களையும் திமுக கைப்பற்றியது. இதேபோன்று, இப்போது மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது. இதுமட்டுமல்லாது தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com