திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் உயிரிழந்த ஆதரவற்ற மூதாட்டியின் உடலை அமிா்தம் அறக்கட்டளையினா் நல்லடக்கம் செய்தனா்.
திருச்சி அரசு மருத்துவமனையில் அண்மையில் உயிரிழந்த சுமாா் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய காவல்துறை சாா்பில் அமிா்தம் அறக்கட்டளைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் உரிய மருத்துவச் சான்றுகள் மற்றும் காவல்துறை அனுமதியுடன் தென்னூா் பகுதியில் உள்ள மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது என அமிா்தம் அறக்கட்டளை நிறுவனா் விஜயகுமாா் மற்றும் வழக்குரைஞா் சித்ரா தெரிவித்தனா்