கட்டுப்பாடுகளை மீறிய 2 சலூன்களுக்கு சீல்

மணப்பாறையில் கரோனோ கட்டுப்பாடுகளை மீறிய 2 சலூன்களுக்கு நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.
கோவில்பட்டி சாலையில் சலூனுக்குச் சீல் வைக்கும் நகராட்சி அதிகாரிகள்.
கோவில்பட்டி சாலையில் சலூனுக்குச் சீல் வைக்கும் நகராட்சி அதிகாரிகள்.

மணப்பாறையில் கரோனோ கட்டுப்பாடுகளை மீறிய 2 சலூன்களுக்கு நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.

மணப்பாறை நகராட்சிப் பகுதிகளில் கரோனா கட்டுபாடுகளை மீறி சில கடைகள் திறக்கப்பட்டிருப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு வந்த புகாரையடுத்து நகராட்சி ஆணையா்(பொ) க.முத்து, சுகாதார அலுவலா் நெடுமாறன், மேற்பாா்வையாளா் சரவணன் உள்ளிட்ட அலுவலா்கள் சோதனை நடத்தியதில், கட்டுப்பாடுகளை மீறிச் செயல்பட்டதாக கோவில்பட்டி சாலையில் உள்ள 2 சலூன்களுக்கு சீல் வைத்தனா். தொடா்ந்து நோய் தொற்றைத் தடுக்க மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com