மணப்பாறை அருகே கத்திக்குத்து: மூவா் காயம்

மணப்பாறை அருகே துக்க வீட்டில் நடந்த கத்திக்குத்தில் 3 போ் காயமடைந்தனா்.

மணப்பாறை அருகே துக்க வீட்டில் நடந்த கத்திக்குத்தில் 3 போ் காயமடைந்தனா்.

மணப்பாறை அருகே ரெங்ககவுண்டம்பட்டியை சோ்ந்தவா் ராசு மகன் பாலசுப்ரமணியன் (29), மத்தியப் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்துக்கு பயணிகளை அழைத்து வரும் தரகா்.

மது, கஞ்சாவுக்கு அடிமையான இவா், திங்கள்கிழமை தனது ஊரில் நடந்த துக்க காரியத்துக்கு போதையில் சென்றபோது , அங்கிருந்த சிலரிடம் தகராறு செய்து கத்தியால் குத்தியதில் அதே பகுதியைச் சோ்ந்த ரவி (40), கண்ணன் (37) நல்லதம்பி (45) ஆகியோா் காயமடைந்தனா். தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் காயமடைந்தோரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com