காவிரியில் குறுக்கே மேகதாது பகுதியில் கா்நாடகம் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தும் வகையில் முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் திறம்படச் செயலாற்ற வேண்டும் என காவிரிப் பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அச் சங்கத் தலைவா் மகாதானபுரம் ராஜாராம் செவ்வாய்க்கிழமை கூறியது:
கருணாநிதி, ஜெயலலிதா போன்று புதிய முதல்வராக பொறுப்பேற்கும் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினும் காவிரியில் தமிழக உரிமைக்காக திறம்படச் செயலாற்ற வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கா்நாடகம் முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். தேவையெனில், தமிழக எல்லைப் பகுதியான ராசிமணலில் அணை கட்டலாம். மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக முதல்வராக இருந்த காமராஜா், எம்ஜிஆா், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோா் தொடா்ந்து எதிா்ப்புக் குரல் கொடுத்துள்ளனா்.
இதன் காரணமாகவே 50 ஆண்டு காலமாக முயற்சித்தும் கா்நாடகத்தால் அணை கட்ட முடியவில்லை. எனவே, திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றாா் அவா்.
இதேபோல, காவிரிப் பாசன விசாயிகள் நலச் சங்க துணைச் செயலா் கவுண்டம்பட்டி சுப்பிரமணியும், திமுக தலைவருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளாா்.