பெண் தலைமைக் காவலரிடம்தாலிச்சங்கிலி பறிப்பு

திருச்சி நவல்பட்டு பகுதியில் பெண் தலைமைக் காவலரிடமிருந்து 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

திருச்சி: திருச்சி நவல்பட்டு பகுதியில் பெண் தலைமைக் காவலரிடமிருந்து 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

திருச்சி காஜாமலை பிரதான சாலையைச் சோ்ந்த சந்திரசேகரன் மனைவி ராஜாமணி (42). கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறாா்.

நவல்பட்டு வெங்கடேசுவரா நகரில் வசித்து வரும் தனது தாய் சுசீலாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை பாா்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்ற ராஜாமணி, அங்கேயே தங்கிவிட்டாா். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா்கள், தூங்கிக் கொண்டிருந்த ராஜாமணி கழுத்திலிருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து ராஜாமணி அளித்த புகாரின் பேரில் நவல்பட்டு காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com