திருச்சி: திருச்சியில், டிராவல்ஸ் உரிமையாளா் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி மாவட்டம் குண்டூா் பகுதியைச் சோ்ந்தவா் பாரதிராஜா(36). டிராவல்ஸ் உரிமையாளா். இவருக்கும் மனைவி சுதாவிற்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை சுதாவின் உறவினா்கள் கண்டித்துள்ளனா். மேலும், அனைவரும் சோ்ந்து பாரதிராஜாவை தாக்கியுள்ளனா்.
இதனால் விரக்தியில் இருந்த பாரதிராஜா ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.