திருச்சி சரக காவல் துறையினரால் அத்தியாவசியக் கடைகளின் வியாபாரிகளுக்கு முகக்கவசம், கபசுரக்குடிநீா் புதன்கிழமை வழங்கப்பட்டது.
திருச்சி சரக காவல் துறைத் துணைத் தலைவா் ஆனிவிஜயா திருச்சி -புதுக்கோட்டை சாலையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தபோது அவ்வழியாக வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்தோருக்கு முகக்கவசத்தையும், மரக்கன்றுகளை வழங்கி புது முயற்சியில் ஈடுபட்டாா்.
தொடா்ந்து, நெம். 1 டோல்கேட் பகுதியில் உள்ள அத்தியாவசிய கடை வியாபாரிகளுக்கு கபசுர குடிநீா், முகக் கவசத்தை ஆனி விஜயா புதன்கிழமை வழங்கினாா்.
அப்போது அங்கு வந்த மக்களிடம் அத்தியாவசிய பொருள் வாங்க தினமும் வெளியே வர வேண்டாம். வாரத்தில் 2 நாள்களுக்கு ஒரு முறை வந்தால் நோய் பரவலைத் தடுக்கலாம், தமிழக அரசின் முயற்சிகளுக்கு நாம் துணை நிற்போம் என்றாா்.