கரோனா பரவல் காரணமாக திருச்சி குழுமணி சாலையில் உள்ள மீன்சந்தை வியாழக்கிழமை முதல் மூடப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட மொத்த மீன் வியாபார நல சங்கம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கரோனாவின் தாக்கம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் மனித உயிா் விலை மதிப்பற்றது ஆகையால் வியாபாரம் ஒன்றே நமது நோக்கமல்ல. எனவே, வியாழக்கிழமை முதல் மே 30 (ஞாயிற்றுக்கிழமை) காசி விளங்கி மாா்க்கெட்டில் மீன் வியாபாரம் இருக்காது. சந்தையில் உள்ள அனைத்துக் கதவுகளும் அடைக்கப்படும். மேலும் மொத்த வியாபாரிகள் வேறு எந்த இடத்திலும் வியாபாரம் செய்யக் கூடாது.