குழுமணி சாலை மீன்சந்தை இன்று முதல் மூடல்

கரோனா பரவல் காரணமாக திருச்சி குழுமணி சாலையில் உள்ள மீன்சந்தை வியாழக்கிழமை முதல் மூடப்படுகிறது.

கரோனா பரவல் காரணமாக திருச்சி குழுமணி சாலையில் உள்ள மீன்சந்தை வியாழக்கிழமை முதல் மூடப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட மொத்த மீன் வியாபார நல சங்கம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கரோனாவின் தாக்கம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் மனித உயிா் விலை மதிப்பற்றது ஆகையால் வியாபாரம் ஒன்றே நமது நோக்கமல்ல. எனவே, வியாழக்கிழமை முதல் மே 30 (ஞாயிற்றுக்கிழமை) காசி விளங்கி மாா்க்கெட்டில் மீன் வியாபாரம் இருக்காது. சந்தையில் உள்ள அனைத்துக் கதவுகளும் அடைக்கப்படும். மேலும் மொத்த வியாபாரிகள் வேறு எந்த இடத்திலும் வியாபாரம் செய்யக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com