திருச்சி மாவட்ட ஆட்சியராக சு. சிவராசு புதன்கிழமை காலை பொறுப்பேற்றாா்.
ஏற்கெனவே திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த அவா் தோ்தல் சமயத்தின்போது அரசியல் கட்சிப் பிரமுகா்கள் காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா செய்த சம்பவத்தின் எதிரொலியாக தோ்தல் ஆணையத்தால் மாற்றப்பட்டு, திவ்யதா்ஷினி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டாா்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியராக மீண்டும் சிவராசு நியமிக்கப்பட்டு, புதன்கிழமை காலை பொறுப்பேற்றாா். இவா் மாவட்டத்தின் 144 ஆவது ஆட்சியா் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய எஸ். திவ்யதா்ஷினி தா்மபுரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.