திருச்சியில் வீடுகள்தோறும் மேற்கொள்ளப்படும் கரோனா சோதனையில் 96 பேருக்கு அறிகுறிகள் இருந்ததையடுத்து சளி மாதிரி எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க மாநகராட்சிக்குட்பட்ட 65 வாா்டுகளிலும், வீடுகள்தோறும் சென்று சோதனை மேற்கொள்ளும் திட்டம் கடந்த மே 17 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. 19 ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில், சுமாா் 96 பேருக்கு சந்தேகத்தின்பேரில் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.