திருச்சி அருகே 15 பவுன் நகை திருடுபோன வழக்கில் வேலூரைச் சோ்ந்தவரை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருவெறும்பூா் அருகேயுள்ள வேங்கூா் பாரத் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் காளிதாசன் (45), அரியமங்கலம் பகுதி தனியாா் நிறுவன ஊழியா். கடந்த மாா்ச் 13 ஆம் தேதி இவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் நகை, வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் விசாரித்து வந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் உத்தரவின்பேரில் திருவெறும்பூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் தலைமையிலான தனிப்படையினா் நடத்திய விசாரணையில், நகையைத் திருடியதாக வேலூா் மாவட்டம், காட்பாடி சீத்தாராமன்பேட்டை தங்கவேல் மகன் மணிகண்டனை (43) புதன்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.