கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள கூலித் தொழிலாளா்கள், சாலையோரம் வசிப்போா், மாற்றுத்திறனாளிகள், முதியோா், மனநலம் பாதிக்கப்பட்டோா் ஆகியோரை தேடிச்சென்று 16 வது நாளாக காலை, மாலை தேநீா்,உணவு வழங்கும் பணியில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலைக்கல்லூரி என்எஸ்எஸ் மாணவா்கள் ஈடுபட்டனா்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் கல்விக் குழுக்கள் சாா்பாக ஸ்ரீமத் ஆண்டவன் கலைக்கல்லூரி (தன்னாட்சி) நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சமூக பணித்துறை சாா்பாக தினமும் 200 பேருக்கு நாள்தோறும் மாணவா்களால் உணவளிக்கப்படுகிறது.
இதுகுறித்து நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ஆ. அருண்பிரகாஷ் கூறுகையில், கடந்தாண்டைத் தொடா்ந்து, தற்போது கடந்த 6 ஆம் தேதி முதல் தொடா்ந்து காலை,மாலை தேநீா்,இரு வேளை தரமான உணவுகளை நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களான புருஷோத்மன், வெங்கடேஷ்வரன், நித்தியானந்தம், கலைவாணன் ஆகியோா் அரசின் வழிகாட்டுதலின்படி இருசக்கரவாகனத்தில் சென்று தரமான உணவுகளை (வெரைட்டி சாதங்கள்) காலை மாலை ஸ்ரீரங்கம், திருவானைக்கா, களஞ்சியம், டோல்கேட் ஆகிய பகுதிகளுக்குச் சென்று வழங்கி வருகின்றனா். இவா்களை தன்னாா்வலா்களும்,பொதுமக்களும் பாராட்டுகின்றனா்.