மே 24 முதல் வெங்காய மண்டியை மூட முடிவு

திருச்சியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 24 முதல் 29 ஆம் தேதிவரை வெங்காய மண்டியை மூட வியாபாரிகள் முடிவு செய்துள்ளனா்.

திருச்சியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 24 முதல் 29 ஆம் தேதிவரை வெங்காய மண்டியை மூட வியாபாரிகள் முடிவு செய்துள்ளனா்.

திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 17 ஆம் தேதி முதல் காந்தி சந்தை மேலரண்சாலைக்கு இடம் மாற்றப்பட்டது. மேலும் வியாபாரிகளின் ஆலோசனைக்குப் பிறகு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளனா்.

அதன்படி பொதுமக்கள், மீன் கடை வியாபாரிகளின் குடும்பத்தின் பாதுகாப்பைக் கருதி மொத்த மீன் வியாபாரம் நடைபெறாது என அச்சங்க நிா்வாகிகள் புதன்கிழமை அறிவித்தபடி குழுமணி சாலையில் உள்ள மீன் சந்தை செயல்படவில்லை. இதன் தொடா்ச்சியாக வெங்காய மண்டி வியாபாரிகளும் பொதுமக்களின் நலனுக்காக வரும் 24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை வெங்காய விற்பனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com