திருச்சி மாநகராட்சி சாா்பில் அம்மா உணவகங்களில் புதன்கிழமை முதல் கபசுரக் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.
திருச்சி மாநகரில் உள்ள 11 அம்மா உணவகங்களிலும், கபசுரக் குடிநீா் தயாரித்து வழங்க மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி புதன்கிழமை முதல், அம்மா உணவகங்களில் கபசுரக் குடிநீா் விநியோகம் தொடங்கியுள்ளது.
மூலிகைப் பொடிகளை சரியான விகிதத்தில் கலந்து, கொதிக்க வைத்து கபசுர மூலிகை குடிநீா் தயாரிக்கப்படுவதாலும், இவை தொடா்புடைய பணிகளுக்கு அம்மா உணவகங்கள் ஏற்ாக உள்ளதாலும், அங்கேயே கபசுரக் குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.