திருச்சி மாவட்டம், லால்குடி பேரூராட்சி பகுதியில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பேரூராட்சி பணியாளா்கள் வீடுதோறும் சென்று பொதுமக்களிடம் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்து வருகின்றனா்.
இவா்களுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி, கரோனா பரவலைத் தடுக்க உதவிட வேண்டுமென லால்குடி பேரூராட்சி செயல் அலுவலா் நளாயினி கேட்டுக் கொண்டுள்ளாா்.