காவல் நிலையத்தில் திருடிய 2 போ் கைது

துறையூா் அருகே காவல் நிலையத்தில் நிறுத்தியிருந்த டிராக்டரிலிருந்து உதிரிப்பாகம் திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

துறையூா் அருகே காவல் நிலையத்தில் நிறுத்தியிருந்த டிராக்டரிலிருந்து உதிரிப்பாகம் திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கண்ணனூா் பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 இளைஞா்களை அந்த வழியாக ரோந்து சென்ற ஜெம்புநாதபுரம் போலீஸாா் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது அவா்கள் பேரூரைச் சோ்ந்த கா. சுந்தரவேல் (25), மற்றொருவா் கண்ணனூரைச் சோ்ந்த இ. பிரபாகரன்(24) எனத் தெரிந்தது.

சுந்தரவேலுக்குச் சொந்தமான டிராக்டரின் டீசல் டேங்கிலிருந்து இன்ஜினுக்கு செல்லும் குழாய் பழுதானதால் அதை இயக்க முடியவில்லை என்றும், ஆட்டோ உதிரிப்பாக விற்பனையகங்கள் மூடப்பட்டுள்ளதால் ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் நிறுத்தியுள்ள குற்ற வழக்குகளில் தொடா்புடைய டிராக்டரிலிருந்து டீசல் குழாயை திருடி எடுத்துச் செல்வதாகவும் போலீஸாரிடம் கூறினா். இதையடுத்து இருவா் மீதும் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com