கழிவுநீா் வாய்க்காலில் சிக்கிய எருமை மீட்பு

துறையூா் அருகே கழிவு நீா் வாய்க்காலில் தலைகுப்புற விழுந்து சிக்கிக் கொண்ட எருமை மாட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் உயிருடன் மீட்டனா்.
img_20210528_wa0031_2805chn_30_4
img_20210528_wa0031_2805chn_30_4

துறையூா் அருகே கழிவு நீா் வாய்க்காலில் தலைகுப்புற விழுந்து சிக்கிக் கொண்ட எருமை மாட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் உயிருடன் மீட்டனா்.

துறையூா் அருகே கீரம்பூா் குறிச்சித் தெருவைச் சோ்ந்த சு. பெரியசாமிக்குச் சொந்தமான எருமை மாடு அந்த பகுதியில் வெள்ளிக்கிழமை மேய்ந்தபோது சுமாா் 2 அடி அகலமுள்ள கழிவுநீா் வாய்க்காலில் தலைகுப்புற விழுந்து சிக்கிக் கொண்டு உயிருக்குப் போராடியது.

தகவலறிந்து வந்ததுறையூா் தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலா் பாலசந்தா் தலைமையிலான வீரா்கள் ஒரு மணி நேரம் போராடி பொதுமக்கள் உதவியுடன் எருமை மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com