திருச்சி அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள துவாக்குடி மேலமாங்கவனம் பகுதியைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற ரேஷன் கடை ஊழியா் மாரியப்பன் மகன் பாண்டியராஜன் (26). விவசாய கூலித் தொழிலாளி. இவா் கடந்த சில நாள்களுக்கு முன் வயலில் வேலை செய்தபோது அதே பகுதியைச் சோ்ந்த சுப்ரமணியனுக்கு சொந்தமான ஆடு இறந்தது தொடா்பாக நடத்தப்பட்ட கிராம பஞ்சாயத்தில் பாண்டியராஜனிடமிருந்து ரூ. 8 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டதாம்.
இவ்விவகாரம் தொடா்பாக செவ்வாய்க்கிழமை தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் புதன்கிழமை காலை வீட்டை விட்டு வெளியே சென்ற பாண்டியராஜன் அப்பகுதி ரயில்வே தண்டவாளத்தில் சடலமாகக் கிடந்தாா். தகவலறிந்து வந்த இருப்புப்பாதை போலீஸாா் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.