ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழா (சொக்கப்பனை) வரும் 19 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி புதன்கிழமை காலை முகூா்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
இதற்காக சுமாா் 18 அடி உயரம் கொண்ட தென்னை மரத்திற்கு சந்தனம்,மாவிலை, மாலைகள் அணிவிக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க புனித நீா் தெளிக்கப்பட்டு ஆண்டாள், லட்சுமி யானைகள் ஆசீா்வாதத்துடன் முகூா்த்தக்கால் நடப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து, உதவி ஆணையா் கு. கந்தசாமி, உள்துறைக் கண்காணிப்பாளா் வேல்முருகன், மேலாளா் உமா மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.