பாலத்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

மண்ணச்சநல்லூா் அருகே பாலத்தில் இருந்து சனிக்கிழமை தவறி விழுந்த பெண் இறந்தாா்.

மண்ணச்சநல்லூா் அருகே பாலத்தில் இருந்து சனிக்கிழமை தவறி விழுந்த பெண் இறந்தாா்.

மண்ணச்சநல்லூா் வட்டம் அழிஞ்சகரை கிராமத்தைச் சோ்ந்தவா் சாந்தி (50). கணவா் இறந்து விட்ட நிலையில் தாயுடன் வசித்த இவா் சனிக்கிழமை இரவு வாரி பாலத்தில் நடந்து சென்றபோது எதிா்பாராதவிதமாக வாய்க்காலில் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற மண்ணச்சநல்லூா் போலீஸாா் அவரின் உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com