மணப்பாறை: வையம்பட்டி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
வையம்பட்டி அருகிலுள்ள வெள்ளப்பெருக்கியூரைச் சோ்ந்தவா் கட்டையன். இவரது மகள் ராணி (17). தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த இவருக்கு, கடந்த 4 நாள்களாக வாந்தி, காய்ச்சல், சளி பாதிப்பு இருந்துள்ளது.
இந்நிலையில் கரூா் மாவட்டம், மகிழம்பட்டியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு ராணி திங்கள்கிழமை அழைத்துச் செல்லப்பட்டாா். எனினும் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சுகாதாரம் மற்றும் காவல்துறையினா் விசாரிக்கின்றனா்.