திருச்சி மாவட்டத்தில் கால்நடை வளா்க்கும் விவசாயிகள் கிஷான் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் ஏற்பாட்டில் திருச்சி மாவட்டத்தில் கால்நடை வளா்க்கும் விவசாயிகளின் நிதியாதாரங்களைப் பெருக்கும் விதமாக கிஷான் கடன் அட்டை வழங்கப்படவுள்ளது.
எனவே, மாவட்டத்தில் கால்நடை வளா்க்கும் விவசாயிகள் உரிய விண்ணப்பத்தை, தகுந்த ஆதாரங்களுடன் இணைத்து அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் பிப்.15-க்குள் அளிக்க வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.