மகாளய அமாவாசையை முன்னிட்டு தா்ப்பணம், இறுதிச் சடங்குகள் உள்ளிட்ட எந்த நிகழ்வுகளுக்கும் அம்மா மண்டபத்துக்கும், காவிரிக் கரைகளுக்கும் பொதுமக்கள் வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறுகையில், மகாளய அமாவாசையை முன்னிட்டு அம்மா மண்டபத்தில் மக்கள் கூட கரோனா காரணமாக அனுமதி இல்லை. எனவே, பொதுமக்கள் யாரும் அம்மா மண்டபத்துக்கோ, காவிரிக் கரைப் பகுதிகளுக்கோ வர வேண்டாம். கரோனா பரவலைத் தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.